mark fieldஐக்கிய இராச்சியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் மார்க் ஃபீல்ட் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் பல்வேறு சந்திப்புகளை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையைக் கண்டறியும் நோக்குடன் இலங்கை வந்துள்ள அவர், நேற்று எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடி இருந்தார். இதன்போது புதிய அரசியல் யாப்பு விவகாரம், வடகிழப்பு இணைப்பு, மனித உரிமைகள், காணாமல் போனோர் விவகாரம் மற்றும் மறுசீரமைப்பு உள்ளிட்ட பலவிடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று அவர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும் காணாமல் போனோரின் உறவினர்களையும் சந்தித்து, அவர்களின் குற்றச்சாட்டுகளை கேட்டறிந்துக் கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.