Header image alt text

dfggffgfgfgfggffநியுசிலாந்து நோக்கி பயணித்த அகதிகளின் படகு நான்கினை, அவுஸ்திரேலிய அதிகாரிகள் இடைமறித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நியுசிலாந்தின் ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

குறித்த படகுகளில் 164 அகதிகள் பயணித்ததாக கூறப்படுகிறது. இலங்கையைச் சேர்ந்தவர்களும் அதில் உள்ளடங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகின்ற போதும், இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

manus_island1பப்புவா நியுகினிக்கு சொந்தமான மானஸ் தீவில் உள்ள ஏதிலிகளை பலவந்தமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முகாம் மூடப்பட்டுள்ள போதும், 421 ஏதிலிகள் அதில் இருந்து வெளியேற மறுப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களை அழைத்துச் செல்வதற்காக இன்றையதினம் 6 பேருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன. Read more

sdfdsfdfdகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 138 பயணிகளுடன் நேற்றிரவு பயணத்தை ஆரம்பித்த விமானமொன்று சிறிது நேரத்தில் மீண்டும் தரைக்கப்பட்டுள்ளது. இயந்திர கோளாறு காரணமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மும்பை நகரை நோக்கி பயணித்த விமானமொன்றே மீள தரையிறக்கப்பட்டதாக இலங்கை விமான நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். நேற்றிரவு 11.30இற்கு பயணத்தை ஆரம்பித்த குறித்த விமானம் சில நிமிடங்களில் தரையிறக்கப்பட்டுள்ளது. Read more

jailசிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தால் அண்மைக்காலமாக தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. Read more

iran earth quakeஈரான் – ஈராக் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள வடக்கு எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 7.3 என்ற அளவில் பதிவாகி உள்ளது.  Read more

paffrelபாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டை பிரஜா உரிமையற்றவர்கள் என்பதை உறுதிபடுத்தும் வகையில் வேறு நாட்டில் பிரஜா உரிமை பெறவில்லை என குறிப்பிடப்பட்ட சத்தியக் கடதாசியொன்றை அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் பெற்றுக் கொள்ளுமாறு பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயத்தை வலியுறுத்தும் வகையில் பெப்ரல் எனப்படும் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டு அமைப்பு, சபாநாயகருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. இந்த நடவடிக்கை ஊடாக சமூகத்தில் நிலவும் சந்தேகத்தை அகற்றி பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தை பாதுகாக்க முடியும் என பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Gamini-Senarath-Lமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வின் காரியாலய பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட மூன்று பேர் விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு – கோட்டை பிரதான நீதிமன்ற நீதிவான் லங்கா ஜயரட்னவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. Read more

protest newவேலையற்ற பட்டதாரிகளுக்குரிய நியமனங்களை வழங்குமாறு வலியுறுத்தி, வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தால் நாளை மறுதினம் (15) காலை 9 மணிக்கு, யாழ். மாவட்ட செயலகம் முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில், வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கருத்துத் தெரிவிக்கையில், “எம்மால் முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான 143ஆவது நாள் போராட்டத்தில், பட்டதாரிகளை பயிற்சி அடிப்படையில் அபிவிருத்தி உதவியாளராக இந்த வருடத்துக்குள் நியமிப்பதாக குறிப்பிடப்பட்டது. Read more

swordயாழ்ப்பாணத்தில் வீதியில் நின்றிருந்த இரு குடும்பஸ்தர்கள் மீது அடையாளம் தெரியாதோர் சரமாரியாக வாள்வெட்டினை மேற்கொண்ட பின் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பிரதான வீதி, பழைய சிறைச்சாலைக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் நேற்று மாலை, குறித்த இருவரும் நின்றுள்ளார்கள். இதன்போது, அந்தப் பகுதியால் உந்துருளியில் வந்த இருவர் குறித்த இரு குடும்பஸ்தர் மீதும் சரமாரியாக வாளினால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். Read more

ddffdதென்னாப்பிரிக்கா உயர்ஸ்தானிகர் மாக்ஸ் அம்மையாருக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகமவுக்குமிடையிலான சந்திப்பு, ஆளுநர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது, கிழக்கு மாகாணத்தில் யுத்தத்துக்குப் பின்னரான அபிவிருத்தி, தேசிய நல்லிணக்க விவகாரங்கள், கிழக்கு மாகாணத்தில் தென்னாப்பிரிக்காவின் முதலீட்டு முயற்சிகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. Read more