Header image alt text

தபால் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடியில், எதிர்வரும் 10ம் திகதி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள, ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தீர்மானித்துள்ளது.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு பல சந்தர்ப்பங்களில் தெரியப்படுத்தியுள்ளதாக, அந்த முன்னணியின் இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக்க பண்டார கூறியுள்ளார். Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக விண்ணப்பித்த தபால் மூல வாக்காளர்களில், சுமார் 560,000 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால்மூல வாக்காளர்களின் பெயர் பட்டியல் எதிர்வரும் 8ஆம் திகதி பூர்த்தி செய்யப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்னபிரிய குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் Taro Kono இன்று இலங்கைக்கு வரவுள்ளார். மேலும் இந்த விஜயத்தின் போது அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

இதேவேளை, சுமார் 15 வருடங்களின் பின்னர் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வரவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வடமாகாண இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டு, மீண்டும் சேவையில் ஈடுபடுவதுடன், வவுனியா பஸ் நிலையத்தில் ஒரு பகுதி இலங்கைப் போக்குவரத்துச் சபையினருக்கு என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண இலங்கைப் போக்குவரத்துச் சபையினர் கடந்த 3 தினங்களாக வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்ட பஸ் நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுக்க முடியாதென பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்தனர். பணிப் புறக்கணிப்பின் மூன்றாம் நாளான இன்று வடமாகாண முதலமைச்சரை, கொழும்பில் இருந்து வருகை தந்த தொழிற்சங்கத்தின் குழுவினர் முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்கள். அந்த சந்திப்பின் போது, வவுனியா பஸ் நிலையத்தில் ஒரு பகுதி இலங்கைப் போக்குவரத்துச் சபையினருக்கு ஒதுக்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து இதுவரையிலான காலப்பகுதிக்குள் 253 முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

பெப்ரல் அமைப்பிற்கு இதுவரையிலும் 154 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கடந்த 9ஆம் திகதியில் இருந்து இதுவரையிலுமான காலப்பகுதியில் காவல்துறை தலைமையகத்திற்கு தேர்தல்கள் தொடர்பிலான 75 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றுள் 24 சட்ட மீறல்களும் 51 தேர்தல் முறைப்பாடுகள் உள்ளடங்குகின்றன.

தோழர் சுந்தரத்தின் 36வது வருட நினைவுதினம்- புளொட் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகர்களுள் ஒருவரும், தளபதியும், புதியபாதை ஆசிரியருமான தோழர். ச. சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) யாழ் சுழிபுரத்தை பிறப்பிடமாய் கொண்ட அவர்; வீரமகனாய் மரணித்து 36வது (02.01.2017) ஆண்டு நினைவு நாள் இன்றாகும். புதிய பாதை அமைத்த தோழனை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றோம். சிறந்த தலைமைப் பண்பும், துணிச்சலும், போராட்டத் தெளிவும் மிக்க பொதுவுடைமைவாதியான தோழர் சுந்தரம் அவர்கள் 02.01.1982 ல் யாழ் சித்திரா அச்சகத்தில் வைத்து புலிகளின் தவைர் பிரபாகரனால் ஒளிந்திருந்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்;. Read more

ஏனைய பௌர்ணமி தினங்களில் காட்சியளிக்கும் நிலவை விட, 14 மடங்கு பெரிய நிலவை இன்று அவதானிக்க முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானிலை விண்வெளி அறிவியல் பிரிவு தெரிவித்துள்ளது.
பௌர்ணமி தினமான இன்று தென்படும் நிலவானது, ஏனைய நாட்களை விடவும், சுமார் 30 வீதம் பிரகாசம் அதிகமாக காணப்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானிலை விண்வெளி அறிவியல் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். Read more

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையை தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்த வேண்டாம் என, அரசியல் கட்சிகளிடம், கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் கோரியுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு எவ்வித தீர்வையும் பெற்றுத்தராதவர்கள் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் இந்த விடயத்தை பிராச்சாரத்திற்கு பயன்படுத்துவதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். Read more

வவுனியாவிலுள்ள இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் தரிப்பிட வளாகத்திலுள்ள கடைகள் மூடப்பட்டு இன்று எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா பழைய பஸ் தரிப்பிடத்தை மூடி, பஸ்கள் உள்ளே செல்ல முடியாத படி, பெரல்கள் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு வௌியிட்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more

லங்கையில் தற்போது 25,000 வரையான வௌிநாட்டு ஊழியர்கள் தங்கியுள்ளதாக, குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் சீன மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என, குடிவரவு குடிகல்வு கட்டுப்பாட்டாளர் நிஹால் ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். Read more