லெபனானில் விசா இன்றி தங்கியிருந்த இலங்கைப் பெண்கள் 53 பேர், அந்நாட்டில் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின் அடிப்படையில் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
வீட்டுப் பணிப்பெண்களாக, பணியாற்ற லெபனான் சென்றிருந்த இவர்கள் முறையான விசா இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அந்நாட்டு அரசாங்கம் வழங்கிய பொது மன்னிப்பு காலத்தை உபயோகப்படுத்தி, லெபனானுக்காக இலங்கை தூதுவர் எடுத்த முயற்சியால் இவர்கள் மீண்டும் தாய் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் தேரர் ஒருவர் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறுதி யுத்தத்தில் தமது உயிர்நீத்த முப்படையினரை கௌரவிக்கும் விதமாக, ஒன்பதாவது போர் வீரர்கள் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான முதலீடுகளை மேலும் அதிகரிப்பது தொடர்பாக தெற்காசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் இலங்கையும் இணைந்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்றின் நாடுகடத்தல் உத்தரவு பிற்போடப்பட்டுள்ளமையானது, அந்த குடும்பத்தை பதற்றத்தில் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – ஒட்டுசுட்டான் வீதிப்பகுதியில் தீடீர் தீபரவல் ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள கடும் வரட்சி மற்றும் அதிகரித்துள்ள வெப்பநிலை மாற்றத்தினால் வனப்பகுதிகளில் தீப்பரவல்கள் இடம்பெற்று வருகின்றன.
சிறீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானங்கள் சில இன்றும் தாமதமாவதாக சிறீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி பேராசியர் ஐ.கே மஹானாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி. திசாநாயக்க ஆகிய இருவரையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அப்பதவிகளில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாங்குளம் 574 ஆவது படைப்பிரிவு முகாம் அமைந்துள்ள காணியை இராணுவத்தினருக்கு சுவீகரிப்பதுக்காக அளவீடு செய்யும் பணிகள் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு, இளங்கோபுரம் காட்டுப்பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைத்து வைத்துள்ளதாக நம்பப்படும் ஒருதொகுதி வெடிபொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.