மாங்குளம் கல்குவாரி பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் போராளியான மாற்றுத் திறனாளி நா. சந்திரசேகரன் என்பவர் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ரூபா 30,000/- நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
வீடு வீடாக சென்று தேங்காய் வியாபாரம் செய்யும் அவர், தனது தொழிலை மேம்படுத்துவதற்காக இந்நிதி வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) சுவிஸ் தோழர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார்(குமார்) அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவாக அனுப்பிவைக்கப்பட்ட நிதியிலிருந்து இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது. Read more
மட்டக்களப்பு வாகரை கதிரவெளியில் 41 சிறுவர்களுடன் இயங்கி வருகின்ற திலகவதியார் சிறுவர் இல்லச் சிறார்களின் ஒருநாள் உணவுத் தேவையினைப் பூர்த்தி செய்யும் வகையில் (06.05.2018) 16,000 ரூபாய் நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டது.
செர்பியா நாட்டின் முதலாவது பிரதி பிரதமரும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சருமான இவிக்கா டெசிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படும் விசேட விளக்கமறியல் கைதிகளுக்காக, தனித்துவமான சிறைக்கூடமொன்றை அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக, நீதி அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ள புகையிரத தொழிற்சங்க ஊழியர்களுக்கும் போக்குவரத்து உயரதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் எவ்வித தீர்மானங்களும் எட்டப்படாத நிலையில் முடிவுக்கு வந்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவரின் முறைப்பாட்டை அடுத்து, நியுயோர்க் நகர சட்டமா அதிபரும், அமெரிக்க ஜனாதிபதியின் கொள்கை ஆலோசகருமான எரிக் ஸ்னெய்டர்மென் பதவி விலகியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை நீங்கலாக அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் 14 ஆம் திகதி 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக வடமாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் வைத்திய கலாநிதி த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண மிகை ஊழியர் அதிபர் சங்கம் இன்றையதினம் கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. கல்வியமைச்சின் வளாகத்தில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரபு நாட்டின் நிதி உதவியுடன் முசலி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வேறு கிராம அலுவலகர் பிரிவில் வசித்துவரும் மக்களை மீள்குடியேற்றும் வகையில்
அரசுக்கும் பிரஜைகளுக்குமிடையில் சிறந்த உறவை பேணவதற்கும் அரசாங்க மற்றும் அரச நிறுவனங்களின் பொறுப்புக் கூறல் தன்மையை உறுதிப்படுத்துவதற்குமான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான சர்வதேச மாநாடு இன்று கொழும்பில் அமைந்துள்ள கொள்கை ஆய்வு நிலையத்தில் இடம்பெற்றது.