bfgfயாழ் மாவட்ட பட்டதாரிகள் தமக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறு, வலியுறுத்தி கடந்த மாதம் 27ஆம் திகதி முதல் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் எழுத்துமூலம் பதில் வழங்கும் பட்சத்தில் மாத்திரமே தமது போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக தமது போராட்டத்திற்கு தீர்வொன்று வழங்கப்படாத நிலையில் நேற்று மனித சங்கிலிப் போராட்டத்தை மேற்கொண்டனர். வடமாகாணத்தில் 4ஆயிரத்து 500ற்கும் அதிகமான பட்டதாரிகள் பட்டப்படிப்பை நிறைவுசெய்துள்ள போதிலும் இதுவரை அவர்களால் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எழுத்துமூலம் பதில் வழங்கும் பட்சத்தில் மாத்திரமே தமது போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.