sddsவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தனது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு, மாகாநாயக்க தேரர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர கூறியுள்ளார்.