1030443011investigationதாய்வானின் வங்கி அதிகாரிகள் மற்றும் இரு புலனாய்வு உத்தியோகத்தர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். நேற்றையதினம் இரவு இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

தாய்வான் வங்கி ஒன்றில் இருந்து பெருந்தொகைப் பணம் இலங்கையிலுள்ள வங்கி ஒன்றுக்கு பரிமாற்றப்பட்ட விவகாரம் தொடர்பிலான விசாரணைகளுக்கு உதவியளிக்கவே அவர்கள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.