Header image alt text

sdsகடலில் குளிக்கச் சென்ற தங்களது பிள்ளைகள் கடல் அலையினுள் மூழ்கி இறந்துள்ள தகவல் அறிந்த பெற்றோர் இருவரும் மரணமடைந்துள்ளனர். துக்கம் தாங்காமலே இவ்விருவரும் மரணமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பட்டியடிச்சேனை கிராமத்தில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. பட்டியடிச்சேனை கல்குடாவினைச் சேர்ந்த சண்முகம் மற்றும் அவரது மனைவி திருமதி யோகேஸ்வரி சண்முகம் ஆகியோர்களே இவ்வாறு இறந்துள்ளனர். பாசிக்குடா கடலில் நண்பர்களுடன் நேற்று நீராடச் சென்ற ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த இரு சகோதரர்கள் காணவில்லையென கல்குடா பொலிசார் தெரிவித்தனர். Read more

pakkir-markarதேசிய ஊடக நிலையத்தின் தலைவராக முன்னாள் ஊடக அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் பதவியேற்றுள்ளார். விசும்பாயாவில் அமைந்துள்ள தேசிய ஊடக நிலையத்தில் இன்று அவர் உத்தியோகபூர்வமாக தம் பதவியினை ஏற்றுக்கொண்டார்.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிடவுள்ள இந்த நிலையத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை நியமிக்க அண்மையில் அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு, பிரதமர் ஊடகப்பிரிவு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களம் ஆகியவற்றை இணைத்து தேசிய ஊடக நிலையம் செயற்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

arpattamகிழக்கு மாகாண சபையால் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பில் அம்பாறை மாவட்டப் பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அம்பாறை மாவட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

அம்பாறை மகாவாபி விகாரையில் ஒன்றுகூடிய பட்டதாரிகள், அங்கிருந்து மணிக்கூட்டுக் கோபுரம்வரை பேரணியாகச் சென்றனர். பின்னர் அங்கு சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவிட்டு, ரீகல் சந்திவரை பேரணியாகச் சென்று மீண்டும் மணிக்கூட்டுக் கோபுரத்தை வந்தடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read more

former-ltteதற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இரசாயன ஊசி விவகாரம் தொடர்பான பரிசோதனைகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தயக்கம் காட்டி வருவதாக வட மாகாண சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து, அது குறித்த யோசனை ஒன்று வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து இவர்களை வைத்தியப் பரிசோதனைகளுக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டது. Read more

train-ticketநடைமுறையிலுள்ள புகையிரத அனுமதிச்சீட்டுகளுக்குப் பதிலாக இலத்திரனியல் அனுமதிச்சீட்டினை அறிமுகப்படுத்த இலங்கை ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்த புதிய திட்டம் இன்னும் 6 மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக புகையிரத பொதுநிர்வாக அதிகாரி ஏ.பீ.ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

sddfயாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்பு கூட்டத்தில், யாழ். மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் பாவனைகளை கட்டுப்படுத்துவது மற்றும் வீதி விபத்துக்களை தவிர்ப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழு கூட்டம் இன்று சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது. தீர்வு காணப்படாமலுள்ள பல்வேறு குற்றச்செயல்களை விரைவுபடுத்தி அவற்றிற்கான தீர்வுகளை காண்பது தொடர்பிலும் சட்டம் ஒழுங்கை முழுமையான முறையில் மாவட்டத்தில் நிலைநாட்ட ஏதுவான சூழலை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. Read more

maithriநியூயோர்க் நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 71ஆவது பொதுச்சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றுமுற்பகல் 10.45 மணியளவில் ஜிகே 651 விமானத்தினூடாக நியூயோர்க் பயணமாகியுள்ளார்.

இந்த அமர்வு அமெரிக்க ஐனாதிபதி பராக் ஒபாமா தலைமையில் நாளையதினம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது. நாளையதினம் தொடக்கம் 26 ஆம் திகதி வரை மேற்படி அமர்வு நடைபெறவுள்ளது. Read more

doctorsமுல்லைத்தீவைச் சேர்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியொருவரின் மரணம் தொடர்பாக இரத்தினபுரி வைத்தியசாலையில் கடமை புரிந்து வந்த வைத்தியர் ஞானகணேஸ் ரஜித் (ஜெனா) கடந்த செவ்வாய்க்கிழமை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த குறித்த வைத்தியரும் மரணமடைந்த இணை மருத்துவப்பிரிவு மாணவி லோறன்ஸ் அனா எப்சிபாவும், திருநெல்வேலி பகுதியில் வீடொன்றில் வசித்து வந்த நிலையில், குறித்த பெண் தீப்பற்றி எரிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமானார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் சந்தேகத்தின் பேரில் மருத்துவரை கைது செய்துள்ளனர்.

ariyadasa-coorayஒழுக்கத்தை மீறி செயற்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது, பொலிஸ் தாபன விதிக் கோவையின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை பொலிஸ்மா அதிபர் ஊடாக முன்னெடுக்கப்படும் என ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே குறிப்பிட்டுள்ளார். Read more

c1பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தை சேர்ந்த சிறார்களுக்கு ரூபா 10,000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கபட்டுள்ளன.

நேற்று வட்டுக்கிழக்கு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த அமரர் பஞ்சாட்சரத்தின் நினைவு தினத்தையொட்டி அவரது குடும்பத்தினரால் முள்ளியவளையிலுள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லச் சிறார்களுக்கு ரூபா 10,000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கபட்டுள்ளன. Read more