எங்களுக்கு சம்பள உயர்வை வழங்காது இழுத்தடிக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்வரும் காலத்தில் நல்ல பாடம் புகட்டுவோம் என்று, லிந்துலை நகரை சுற்றி வலைத்த எட்டுக்கும் மேற்பட்ட தோட்ட பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.
இன்றுகாலை இடம்பெற்ற இப் போராட்டத்தில் முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் இராஜாதுரையின் உருவ பொம்மை ஒன்றுக்கு பாதணி மாலையிட்டு தொழிலாளர்கள் தூக்கிவந்து எரியூட்டினர்.
Read more








