karikalanயாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தும், மாவீரர் தினத்தை நினைவூட்டும் வகையிலும் இன்று சுவரொட்டிகள், ஒட்டப்பட்டுள்ளன.

நவம்பர் 27ஆம் திகதி அனுஸ்டிக்கப்படும் மாவீரர் தினம், மற்றும் 26 ஆம் திகதி புலிகளின் தலைவருடைய பிறந்த நாள் என்பவற்றை கொண்டாடும் வகையிலான ‘இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கரிகாலன்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளும் மாவீரர் தினத்தை நினைவுகூரும் வகையிலான சுவரொட்டிகளும் பல்கலைகழக வளாகத்தில் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன. நேற்று வடமாகாண சபை அமர்வின்போது மாவீரர் தினத்தை நினைவு கூருவதற்கான பிரேரணை ஒன்று கொண்டு வந்தபோதும் உறுப்பினர்கள் சிலரின் எதிர்ப்பால் பிரேரணை மீளப்பெறப்பட்டது. அத்துடன் கூட்டு நினைவுகூரலுக்கு அரசு தடைவிதித்துள்ள நிலையிலும் இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை மாணவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் யாழ், பல்கலைக்கழகத்துக்குள் புதன்கிழமை (23) அதிகாலை அத்துமீறி ஆயுதங்களுடன் நுழைந்த சீருடை தரித்த பொலிஸார், சக மாணவர் ஒருவருடைய பிறந்தநாளை கொண்டாடிய பல்கலைக்கழக மாணவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துச்சென்றமையும் குறிப்பிடத்தக்கது.