Header image alt text

dfgfgfகௌரவ குழுக்களின் பிரதித் தலைவர் அவர்களே!

இந்த புதிய நல்லாட்சி அரசினுடைய இரண்டாவது வரவுசெலவுத் திட்டம் சகலருக்கும் நன்மை பயக்கும் துரிதப்படுத்தப்பட்ட வளர்ச்சியை நோக்கி என்ற குறியீட்டுடன் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.

இதிலே பல விடயங்கள் கூறப்பட்டிருக்கின்றன. இந்த நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி மாத்திரமல்லாது மாணவர்களுக்கு முக்கியமாக கல்விக்கு என இப்படியாக பல நல்ல விசயங்கள் கூறப்பட்டிருந்தாலும், இந்த வரவுசெலவுத் திட்டம் நிச்சயமாக நடுத்தர அல்லது வறுமைக் கோட்டுடன் வாழக்கூடிய மக்களுக்கு முழுமையான ஒரு பயனைக் கொடுக்கக்கூடிய ஒரு வரவுசெலவுத் திட்டமாக பார்க்க முடியாமல் இருக்கின்றது. Read more

img_3893ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் வட மாகாண சபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் மாகாண அபிவிருத்திக்கான தனது நிதியில் இருந்து ரூபா 50,000/- துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள் கிராம பிள்ளையார் கோவிலின் அபிவிருத்திக்காக வழங்கியுள்ளார்.

கடந்த 10.11.016 அன்று துணுக்காய் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு. இ.பிரதாபன் முன்னிலையில் ஆலய நிர்வாக சபைத் தலைவர் திரு. மதியழகனிடம் அதற்கான காசோலை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் உதவித்திட்டப் பணிப்பாளர் திரு. நந்தசீலன், கிராம உத்தியோகத்தர் திரு. நாகபாதம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

ereகுருநாகல் ரத்தரவூவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரத்தருவ பகுதியில் உள்ள ஹோட்டலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அடையாளம் தெரியாத கார் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, காருக்குள் இருந்த இருவரால் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. Read more

fdfdfdfமட்டக்களப்பு பட்டிப்பளை கிராம சேவை உத்தியோகத்தருக்கு நீதி கோரி, வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசசெயலக பிரிவில் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஒரு மணி நேர பணிப் பகிஸ்கரிப்பில் இன்று ஈடுபட்டிருந்தனர்.

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச செயலகம் முன்பாக உள்ள வீதியோரத்தில் கறுப்பு பட்டி அணிந்து ஒரு மணிநேர பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். Read more

gfgஅம்பாறை மாவட்டம் பொத்துவில் உடும்பிகுளம் பகுதியில் மரப்பொந்தொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் கைக் குண்டுகள், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் அருகம்பை முகாம் அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, மைக்ரோ துப்பாக்கி, மகசீன்கள் இரண்டு, 9 மில்லி மீற்றர் ரவைகள் 73 மற்றும் பல்வேறு வகையான கைக்குண்டுகள் ஆறும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. Read more

sfdfபேராதனை பல்கலைக்கழக மாணவர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

அப் பல்கலையின் கலைப் பிரிவைச் சேர்ந்த முதலாம் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கு இடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இறுதி வருட மாணவர்களின் வழியனுப்பும் நிகழ்வு தொடர்பில் அழைப்பிதல் வழங்கும் நடவடிக்கைகளில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இதற்குக் காரணம் என தெரியவருகிறது. Read more

courts (1)தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக்கை, எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஷந்தன கலங்சூரிய, இன்று உத்தரவிட்டுள்ளார்.

தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக், மாளிகாவத்தை பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டிருந்தார். தொடந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. Read more

dfdfமட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், செங்கலடி – பதுளை வீதியிலுள்ள பன்குடாவெளியில் அரசமரம் உள்ள காணிக்குள், இன்றுகாலை வந்ததையடுத்து, அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.

குறித்த இடத்தில் பௌத்த மத அடையாளங்கள் காணப்படுவதாகவும் கடந்த காலங்களில் பௌத்த வழிபாட்டுத்தலம் இருந்ததாகவும் கூறி, தனியார் காணிக்குள் அத்துமீறி நுழைந்து அமர்ந்துகொண்டதால் பதற்ற நிலை ஏற்பட்டது.

wreசிலாபம் மாதம்பே பகுதியில் பாழடைந்த பகுதியில் இருந்து 130 மில்லிமீற்றர் ரக பழைய மோட்டார் குண்டுகள் 2 பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த மோட்டார் குண்டுகளை செயலிழக்கச் செய்வதற்காக புத்தளம் விசேட அதிரடிப்படை முகாமுக்கு ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 மோட்டார் குண்டுகளை குறித்த இடத்திற்கு கொண்டு வந்த நபரை தேடி பொலிஸார் விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்ததுள்ளனர்.