Header image alt text

sampanthan-britishஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பரோன்ஸ் அனிலே அவர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று கொழும்பிலுள்ள பிரித்தானிய உயரிஸ்தானிகரின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அமைச்சரை தெளிவுபடுத்திய கூட்டமைப்பின் தலைவர், தேசிய பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை அரசியல் யாப்பினூடாக அடைவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார். Read more

prageeth ekneligodaஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மீதமிருந்த இரண்டு இராணுவ புலனாய்வு அதிகாரிகளும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த உத்தரவினை அவிசாவளை நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. பிரகீத் எக்னெலிகொட வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரண்டு இராணுவ புலனாய்வு அதிகாரிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய சந்தேக நபர்கள் இதற்கு முன்னர் விடுவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

maththala-airportஇலங்கையின் இரண்டாவது விமான நிலையம் மத்தளையில் திறக்கப்பட்டது. எனினும் அதன் மூலம் வருமானம் ஈட்டும் வழிவகைகள் ஏற்படுத்தப்படவில்லை.

அதனால் அத்திட்டம் தோல்வியடைந்தது. இருந்தபோதிலும் 2017 அம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில் கட்டுநாயக்க விமான நிலைய ஓடு பாதையில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. Read more

sri lanka chinaஇலங்கையுடன் ஒரு குற்றவியல் நீதித்துறை உதவி ஒப்பந்தமொன்றில் சீனா கையொப்பமிட்டுள்ளதை சீனாவின் உயர் சட்டமன்றம் அங்கீகரித்துள்ளதாக சீனாவின் அலுவலகச் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் குழு விடுத்த அறிக்கையில் சீனாவின் அடிப்படைச் சட்டத்திற்கமைய நட்பு ரீதியிலான பேச்சுவார்த்தைகளின் முடிவில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

ranilமஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சில பரிந்துரைகளை அமுல்படுத்த முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த ஆணைக்குழுவின் தலைவராக இருந்த முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டிசில்வாவில் நினைவு பேருரையில் பங்கேற்று உரையாற்றும் போதே பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். Read more

sdfdயுத்த குற்ற விசாரணைகளில் சர்வதேச உள்ளீடுகள் அவசியம் தேவை என மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானியாவின் ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான அமைச்சர் பரோனெஸ் ஏன்லேவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரனுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதன்போது வடக்கு முதலமைச்சர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். Read more

china-ambasadorஇலங்கை அரசாங்கம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட சீனத் தூதுவருடன், வெளிவிவகாரச் செயலர் எசல வீரக்கோன், தொலைபேசிமூலம் உரையாடியுள்ளதாக கூறப்படுகின்றது.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வெளியிட்ட கருத்துக்களை ஊடகவியலாளர்கள் முன்பாக விமர்சித்து சீனத் தூதுவர் யிஷியாங்லியாங் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். Read more

xvxcvcvவிஞ்ஞானம், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள் ஆகிய விடயங்களில் ஒத்துழைப்பு வழங்க இலங்கை – கியூப அரசுகள் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன.

ஒக்டோபர் 31இலிருந்து நவம்பர் 4ஆம் திகதி வரை இடம்பெற்ற சர்வதேச விஞ்ஞான, தொழில்நுட்ப, புதிய கண்டுபிடிப்புகளுக்கான மாநாட்டிலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. Read more

mcயாழ். மாநகரசபை சுத்திகரிப்பு தொழிலாளர்கள் இரண்டாம் நாளாகவும் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த 10 வருடங்களாக தொழிலில் ஈடுபடும் தம்மை நிரந்தரமாக்க கோரி நேற்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட தம்மை மக்கள் பிரதிநிதிகள் யாரும் சந்திக்கவில்லை எனவும் தெரிவித்தனர். மேலும் உரிய தீர்வு கிடைக்கும்வரை தொடர்ச்சியாக போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.

vasகொலைக்குற்றம் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன தொடர்பான வழக்குகளிலிருந்து விலகிக் கொள்வதாக, உயர் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக அறிவித்துள்ளார்.

மரணதண்டனை கைதியான வாஸ் குணவர்தன, புலனாய்வுப் பிரிவின் முக்கிய அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு சட்டமா அதிபரால் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. Read more