maithri (15)இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 8ஆம் திகதி இந்தோனேஷியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த விஜயத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதோடு இவை கடற்றொழில் மற்றும் சமுத்திரவியல் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் ஒத்துழைப்பு சார்ந்த உடன்படிக்கைகளாக இருக்குமென தெரிவித்தார். இது தொடர்பில், பதில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தாக்கல் செய்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைத்ததாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.