முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க, நாளை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தால் வடமராட்சிப் பகுதியில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை தொடக்கி வைப்பதற்கும், பார்வையிடுவதற்குமே அவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். நாளை சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு அங்கு விஜயம் செய்யும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மூன்று நிகழ்வுகளில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.