teacherஅதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வை பெற்றுக்கொள்வதற்காக, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், எதிர்வரும் ஆசிரியர் தினத்தன்று, பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

பதவி உயர்வு இன்மை, 2016-2017 சுற்றுநிருபத்துக்கு அமைய அதிபர்களுக்கான கொடுப்பனவை வழங்காமை, ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவையை வழங்காமை போன்ற பல காரணங்களை முன்வைத்தே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைவாக, எதிர்வரும் 6 ஆம் திகதி பகல் 2 மணிக்கு, கொழும்பு வலயக் கல்வி அலுவலகத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்குமாறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.