Header image alt text

sfsdfsdஉலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற பெருமையை சிங்கப்பூர் நாட்டு கடவுச்சீட்டு பெற்றுள்ளது. இந்த கடவுச்சீட்டு மூலம் விசா இல்லாமல் 159 நாடுகளுக்கு செல்ல முடியும்.

சர்வதேச ஆலோசனை நிறுவனமான ஆர்டான் கேபிடல் என்ற நிறுவனம், உலக நாடுகளின் கடவுச்சீட்டுகள் குறித்த தரவரிசையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. விசா இன்றி பயணம் செய்ய அனுமதிப்பதன் அடிப்படையில் முதல் 10 இடங்களை பிடித்த உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சிங்கப்பூர் 159 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. Read more

USA-GUNS/OBAMA

USA-GUNS/OBAMA

சட்டவிரோதமான ஆயுதங்களைக் கைப்பற்றும் வகையில், கடந்த 20 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில், 1,164 ஆயுதங்களும் 3,548 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்தச் சுற்றிவளைப்புத் தேடுதல்கள், 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரையிலும் முன்னெடுக்கப்பட்டன. 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் வரையிலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 437 ஆயுதங்களும் 547 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. Read more

sadsdஇலங்கையின் கடற்பிராந்தியத்துக்கு அடுத்த மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் 9 போர்க் கப்பல்கள் வருகைதரவுள்ளனவெனத் தகவல் கிடைத்துள்ளது.

இதன் முதற்கட்டமாக பங்களாதேஷ் நாட்டுக்குச் சொந்தமான ளுழஅரனசய யுஎதையn என்ற போர்க் கப்பல், கொழும்புத் துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து இந்தோனேஷியா, தென்கொரியா, பங்களாதேஷ், இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் போர்க் கப்பல்கள், இலங்கைக்கு வருகைதரவுள்ளனவெனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, தென்கொரிய போர்க் கப்பல்கள் இரண்டு, கொழும்புத் துறைமுகத்தை இன்று வந்தடையவுள்ளன. Read more

reutersபுலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்களின் அகதி விண்ணப்பத்தை நிராகரித்து, அவர்களை இலங்கைக்கு நாடுகடத்த முடியும் என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நீதிபதிகள் ஆலோசனைக் குழுவின் சட்டத்தரணி ஒருவர், இந்த ஆலோசனையை வழங்கி இருப்பதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரியிருந்த இலங்கையர் ஒருவர் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக தொடுத்திருந்த வழக்கின் நிமித்தம், இந்த ஆலோசனை கோரப்பட்டிருந்தது. Read more

manus iland refugeesபப்புவா நியுகினிக்கு சொந்தமான மனுஸ் தீவின் அகதிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் பலர் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் கடற்கடந்த விசாரணை கொள்கையின் அடிப்படையில், ஈழ அகதிகள் உள்ளிட்ட 700க்கும் அதிகமானவர்கள் குறித்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். Read more

Sinniahஇலங்கை கடற்படைத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெறும், வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, 2017 அக்டோபர் 25ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், அட்மிரலாகப் தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1982ம் ஆண்டு இலங்கை கடற்படையில் இணைந்த அட்மிரல் சின்னையா 35 ஆண்டுகள் பணியாற்றியிருந்தார். இலங்கை கடற்படைத் தளபதியாக கடந்த அகஸ்ட் மாதம் 22ம் திகதி பதவியேற்ற, ட்ராவிஸ் சின்னையா, இன்றுடன் ஓய்வுபெறுகிறார்.

asdasdasdயாழ்ப்பாணத்தில் கிணறு ஒன்றில் இருந்து வெடிகுண்டு தொகை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர். குறித்த வெடிபொருட்கள் கொடிகாமம் கச்சாய் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்தே மீட்கப்பட்டுள்ளன.

13 வெடிக்குண்டுகள், 60 கைக்குண்டுகள், 06 மோட்டார் குண்டுகள் இவற்றில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் சிறப்பு அதிரடிப்படையினரால் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டு அரியாலையில் நேற்று பாதுகாப்பாக வெடிக்க வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sirimevan-Ranasinghe-626x380புதிய கடற்படை தளபதியாக ரியர் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனத்தினூடாக சிறிமெவன் ரணசிங்க வைஸ் அட்மிரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படையின் 21ஆவது தளபதியாக வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். Read more

ranjanபிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை மீண்டும் நவம்பர் 21ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில்,

மாகல்கந்த சுதந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவரும் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகளுக்கு பதிலளிக்க அவர் இன்றையதினம் நீதிமன்றம் சென்றிருந்தார். இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

sisilaலிற்றோ கேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலில முணசிங்க உள்ளிட்ட நால்வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாய்வான் வங்கி ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக 1.1 மில்லியன் டொலர் பணம், இலங்கையிலுள்ள வங்கி ஒன்றிற்கு பரிமாற்றப்பட்ட விடaயம் தொடர்பில், இவர்கள் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். Read more