sஅனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல்கலைகழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ் நயினாதீவை சொந்த இடமாக கொண்டவரும், தற்போது கொழும்பில் வசித்து வரும், ரஜரட்ட பல்கலைகழக மாணவ னான தவகுலரெத்தினம் ரகுராம் (வயது 24) எனும் மாணவனே உயிரிழந்தவராவார்.

சக மாணவனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டு இருந்தவேளை வீதி வளைவொன்றில் மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்டநிலையில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கபப்டுகின்றது. குறித்த விபத்து சம்பவத்தில் குறித்த மாணவன் உயிரிழந்ததோடு மற்றைய மாணவன் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.