madu trainரயில் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை மற்றும் அவர்களுக்கான பதவி உயர்வு ஆகிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு கோரிக்கை விடுத்து, இன்று நள்ளிரவு முதல், 48 மணித்தியாலங்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, பல்வேறு சந்தர்ப்பங்களில் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தபோதும், இதுவரை நிறைவேற்றப்படவில்லை என, அந்தச் சங்கத்தின் செயலாளர் ருவன் பத்திரண, தெரிவித்துள்ளார்.“வேலைநிறுத்த காலத்தில், சகல ரயில் நிலையங்களும் பூட்டப்பட்டிருக்கும் என்றாலும், கொழும்பு நகரை அண்மித்த பிரதேசங்களில், அலுவலக நேரங்கள் மற்றும் பாடசாலை நேரங்களில் சில ரயில்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்படும். எனினும், எந்தவொரு பயணச்சீட்டுகளும் விநியோகிக்கப்பட மாட்டாது”, எனவும் அவர் கூறியுள்ளார்.