Header image alt text

kalaiyarasanகிளிநொச்சி விநாயகபுரத்தில் வசித்து வரும் வடபோர்முனையின் கட்டளைத்தளபதியாக இருந்து மரணமடைந்த லெப்டினன்ட் கேணல் கலையழகனின் மனைவிக்கு, கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பாணை விடுத்துள்ளனர். வட போர்முனையின் கட்டளைத் தளபதிகளில் ஒருவராக இருந்து மரணமடைந்த கெங்காதரன் எனும் லெப்டினன்ட் கேணல் கலையழகனின் மனைவி விடுதலைப்புலிகள் அமைப்பில் 7வருடங்கள் இருந்ததாகவும், கலையழகன் பயன்படுத்திய கைத்துப்பாக்கியை தற்போதும் வைத்திருப்பதாகவும், புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகளை பேணுவதாகவும், வெளிநாடுகளில் இருந்து அதிகளவான உதவியை பெற்றுக்கொள்வதாகவும் கூறி பல தடவைகள் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரித்துள்ளனர். Read more

eluvaithivuகிளிநொச்சி இரணைதீவில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முதல் குறித்த பிரதேசத்தில் மீன்பிடிப்பதற்கு அனுமதி கடற்படையினரால் வழங்கப்பட்டுள்ளது. கடந்த கால  யுத்தம் காரணமாக கடந்த 1992ஆம் ஆண்டுமுதல் இரணைதீவில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 200 மீனவக் குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். Read more

exam ....கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியைப் பூர்த்தி செய்த 3225 பேருக்கு அடுத்தமாதம் 4ஆம் திகதி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட இருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வைபவம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் காலை 10 மணிக்கு இடம்பெறும். இவர்களது நியமனம் அந்த மாதம்முதல் நடைமுறைக்கு வருமென்றும் கல்வி அமைச்சின் கல்வி சேவைகள் உள்ளக மேலதிக செயலாளர் ஐ.எம்.கே.பி. இங்கசிங்ஹ தெரிவித்துள்ளார். Read more

kapila-jayampathiஇலங்கை விமானப்படையின் 16 ஆவது தளபதியாக எயார் மார்ஷல் கபில ஜயம்பதி, இன்று தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

விமானப்படை தலைமையகத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது. விமானப்படையின் உயரதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் மேற்படி கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வினில் கலந்துகொண்டிருந்தனர்.

eluvaithivuகரையோரப் போக்குவரத்து சேவைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு, எழுவைதீவில் ஒரு புதிய இறங்குதுறைக்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பித்திருப்பதாக வட பிராந்திய கடற்படை கமாண்டர் றியர் அட்மிரல் பியந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இங்கு கப்பல் சேவையை மேம்படுத்த கப்பல், துறைமுக அமைச்சின் ஒரு கிளை அலுவலகம் ஊர்காவற்றுறையில் திறக்க ப்பட்டுள்ளது. கடல் மார்க்காமாக வரும் கப்பல்களின் தகுதிகாண் அத்தாட்சிப் பத்திரங்களை இந்த அலுவலகம் விநியோகிக்கும். இங்கு இடம்பெற்ற சந்திப்பு நிகழ்வொன்றில் குடாநாட்டின் அபிவிருத்தித் திட்டங்களை மீளாய்வு செய்யும்போது இத் தகவல்கள் வெளியிடப்பட்டன. Read more

white-vanயாழில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளுக்காக ஆஜராகி, பின்னர் வெளியில் வரும்போது மூவரை, வெள்ளை வேனில் ஏற்றிச் சென்றுள்ளதால், நீதிமன்ற வளாகத்தில் இளைஞர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. வெள்ளை வேனில் வந்த கொழும்பு குற்றப்பிரிவினர் இன்று இவர்களை பிடித்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. வித்தியாவின் படுகொலை சம்பவத்தின் பின்னர், யாழ். நீதிமன்ற கட்டிடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று யாழ். நீதிமன்றில் இடம்பெற்றது. குறித்த வழக்கு விசாரணைக்காக 74பேர் இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். இதேவேளை, வழக்கிற்கு சமூகமளிக்காத நபர் ஒருவருக்கு நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஏனையோரின் வழக்கு விசாரணையினை எதிர்வரும் நவம்பர் மாதம் 28ம் திகதிக்கு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்தரன் ஒத்திவைத்துள்ளார். Read more

indiaகாவிரி நீர்ப்பங்கீடு தொடர்பிலான இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து தமிழகத்திலும் கர்நாடகாவிலும் பல பகுதிகளில் வன்முறைகள் தொடர்கின்றன. பெங்களூரில் இரண்டு இடங்கில் வன்முறைகளை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, பெங்களூரில் தமிழகத்தைச் சேர்ந்த 50ற்கும் அதிகமான தனியார் பஸ்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. பெங்களூரில் அமுல்படுத்தப்பட்ட 144 தடை உத்தரவு நாளைவரை நீடிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. Read more

india-ministerஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் முன்மொழியப்பட்டுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக பதில் வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். Read more

vannivilankulamமுல்லைத்தீவு, மாந்தைகிழக்கு வன்னிவிளாங்குளம் பகுதியில் இன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுடன், மோட்டார் சைக்களில் மோதி விபத்துக்குள்ளானதில், குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் ஒருவர் பலியானதுடன் அவருடைய 14 வயது மகன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பாள்புரம் வன்னிவிளாங்குளத்தைச் சேர்ந்த இரவிக்குமார் இன்பமலர் (வயது 38) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இச்சம்பவத்தின்போது உயிரிழந்துள்ளார். அவரது மகன் இரவிக்குமார் கீதன் (வயது 14) என்பவர் தற்போது சிகிக்சை பெற்று வருகின்றார். இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

accidentயாழ்பாணம் – திருகோணமலை வீதியின் கன்னியா பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டுவிலகி விபத்துக்கள்ளாகியதில் 11பேர் வரையில் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்றுஅதிகாலை 4.30மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்பாணத்திலிருந்து திருகோணமலை பயணித்த போதே குறித்த பஸ் விபத்துக்குள்ளாகியது. விபத்தில் காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.