sssசூரியகலத்தை பயன்படுத்தி சூரிய ஒளி மூலம் பாடசாலைகளுக்கு மின்சார வசதியை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று

கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் அவர்களுக்கும் கொரிய நாட்டு பிரதிநிதி கிம்ஜிங் ஹோவ் அவர்ககுக்கும் இடையில் கல்வி இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்றுள்ளது.  இந்த கலந்துரையாடல் மூலம் பாடசாலைகளுக்கு சூரிய ஒளி ஊடாக மின்சாரம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த செயற்திட்டம் நடைமுறைபடுத்தும் சந்தர்ப்பத்தில் பாடசாகைகளின் அதிக பண செலவுகளை குறைத்துக் கொள்ள முடியும். அத்துடன் மின்சாரமே கிடைக்காத தோட்ட மற்றும் கிராமபுர பாடசாலைகளுக்கு மின்சாரத்தை பெற்றுக் கொடுக்க முடியும்.

இந்த திட்டம் அழுலுக்கு வரும் பட்சத்தில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மின்சாரம் இன்றி இயங்கும் பாடசாசைகளுக்கும் உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.