யாழ்ப்பாணம், நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயப் பகுதியில் நத்தார் தினக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வீச்சில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்றுமாலை இடம்பெற்ற வாள்வீச்சு சம்பவத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தரான கிறிஸ்தோபர் பிரனீத், நவாலியைச் சேர்ந்த இளைஞரான வின்சன், ஆட்டோ சாரதியான சாய்மாறன் ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் நத்தார் தினக் கொண்டாட்டம் இடம்பெற்றிருந்த வேளை அங்கு வாள், கத்தி மற்றும் கொட்டன்களுடன் வந்த ஆயுததாரிகளே சரமாரியான வாள் வீச்சை அங்கு நின்றிருந்தவர்கள் மீது நடத்தியிருந்தனர். Read more








