இலங்கையில் இயற்கை எரிவாயு மற்றும் கனிய எண்ணெய் வளங்கள் தொடர்பான ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கை அரசு சார்பாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளார். இந்நிகழ்வு பெற்றோலிய வளங்கள்அபிவிருத்தி செயலகத்தில் இடம்பெற்றது. Read more
அரச நில அளவையாளர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் புதிய வரைப்படம் இன்று வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று காலை அலரி மாளிகையில் இடம் பெற்றுள்ளது.
ஐக்கிய அமெரிக்காவின் ஆயுதம் தாங்கிய படைகளின் காங்கிரஸ் குழு பிரதிநிதிகள் நேற்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர்.
ஏ 35 பரந்தன் முல்லை வீதி, சுண்டிக்குளம் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த ´லங்கா சதொச´ விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணிகள் இன்று 3 ஆவது நாளாக இடம் பெற்று வருகின்றது.
மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்க கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
புத்தளம் மாவட்டத்தின் உடப்பு மற்றும் ஆனமடு கிராமங்களுக்கு மக்கள் பயணம் செய்வதற்காக, கடற்படையினரால் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கொலையுண்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டக் கோரியும் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மனித உரிமைகள் நிறுவனங்களின் உலகலாவிய அமைப்பினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு ‘ஏ” தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.