ranil wickrama15 ஆவது ஜேர்மனிய வியாபார ஆசிய பசுபிக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஹொங்கொங் சென்றுள்ளார்.

இன்று காலை பிரதமர் உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க விமானம் நிலையம் ஊடாக ஹொங்கொங் சென்றுள்ளனர். ஆசிய பசுபிக் வலய வர்த்தகர்கள் மற்றும் ஜேர்மனிய வர்த்தகர்களுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவதற்காக இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகிய பின் நடைபெறும் முதலாவது மாநாடு இதுவாகும். ஹொங்கொங் விக்டோரியா துறைமுகத்திற்கு அருகில் உள்ள ஹொங்கொங் சர்வதேச மாநாட்டு மற்றும் கண்காட்சி மண்டபத்தில் இன்றுமுதல் எதிர்வரும் 05ம் திகதிவரை இம்மாநாடு இடம்பெறுகிறது. ஜேர்மன் மற்றும் ஆசிய பசுபிக் வலய முன்னணி கொள்கை வகுப்பாளர்கள், அறிஞர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.