mcயாழ். மாநகரசபை சுத்திகரிப்பு தொழிலாளர்கள் இரண்டாம் நாளாகவும் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த 10 வருடங்களாக தொழிலில் ஈடுபடும் தம்மை நிரந்தரமாக்க கோரி நேற்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட தம்மை மக்கள் பிரதிநிதிகள் யாரும் சந்திக்கவில்லை எனவும் தெரிவித்தனர். மேலும் உரிய தீர்வு கிடைக்கும்வரை தொடர்ச்சியாக போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.