mangalaஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் ஊடகங்களின் ஊடாக அல்லாமல் நேரடியாக தமது அமைச்சுடன் கலந்துரையாடி பிரச்சினைகளை தீர்த்து கொள்ளுமாறு சீன தூதுவருக்கு ஆலோசனை வழங்கியதாக அமைச்சர் மங்கள சமர வீர தெரிவித்துள்ளார்.

த இந்து செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அண்மையில் நிதியமைச்சருக்கும் சீன தூதுவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே மங்கள சமரவீர இதனை தெரிவித்துள்ளார். சீனா இலங்கைக்கு குறைந்த வட்டி வீதத்திலேயே கடன்களை வழங்கியுள்ளதாக சீன தூதுவர் கருத்து வெளியிட்டிருந்தார். இந்தநிலையில், அவ்வாறு குறைந்த வட்டி வீதத்தில் சீனா இலங்கைக்கு கடன்களை வழங்கியிருந்தால் அதனை உறுதிப்படுத்துமாறும்,

அதிக வட்டிக்கு சீனா இலங்கைக்கு கடன்வழங்கியதை தம்மால் உறுதிப்படுத்த முடியும் என்பதை நிதியமைச்சர் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும் சீனா, இலங்கை உறவில் எந்த விதமான விரிசலும் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.