Header image alt text

dilan pereiraஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை எவ்வாறான வாக்குறுதிகளை கொடுத்தாலும் இலங்கைக்குள் கலப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். சர்வதேச கட்டளைகளுக்கு அடிபணிய ஒருபோதும் தயார் இல்லை என சிறீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப்பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நகர்வுகள் மிகவும் மோசமான வகையில் அமைந்துள்ளது. வெகு விரைவில் கலப்பு அரசாங்கத்தை கலைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். Read more

sdfgdsகிளிநொச்சி, நெத்தலியாறு பகுதியில் வெடிப்பொருள் கொண்ட பொதியொன்று நடு ஆற்றில் மிதப்பதாக தெரிவிக்கப்பட்ட இரகசியத் தவலையடுத்து, அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்தப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டிருந்தனர். அதனையடுத்து, குறித்த வெடிபொருளை மீட்பதற்காக விசேட அதிரடிப்படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதுடன், அதிலிருந்து சில வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

trainபுகையிரத கடவையில் படுத்திருந்தவர் மீது புகையிரதம் மோதியதில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றுகாலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணம் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கும், புங்கன்குளம் புகையிரத நிலையத்திற்கும் இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ் அரியாலை கிழக்கைச் சேர்ந்த தவநாயகம் திரேந்திரா (வயது 28) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடிருந்தார். Read more

chandrikaதேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலக அமைச்சினால் முன்னேடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் நேற்று யாழ். தெல்லிப்பளை வீமன்காமம் தெற்கு பகுதி மக்களின் நலனுக்கான சுகாதார நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலக அமைச்சின் தலைவியும், முன்னாள் ஐனாதிபதியும் ஆகிய சந்திரிக்கா பண்டாரநாயக்க கலந்துகொண்டு இந்த செயற்றிட்டத்தினை ஆரம்பித்து வைத்தார். Read more

maithriரஷ்யாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பினார். மூன்று நாட்கள் ஜனாதிபதி ரஷ்யாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையில் பல கட்ட சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார்.

60 வருட கால ரஷ்ய – இலங்கை உறவுகளை மேலும் முன்கொண்டு செல்வதற்கு நட்புறவு மற்றும் சுமூகநிலைமையை வளர்த்துக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமைந்திருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more

accident (3)மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெல்லாவெளி பகுதியிலிருந்து வேகமாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், வழியில் சென்று கொண்டிருந்த எருமைமாடு ஒன்றுடனும். பின்னர் பனைமரம் ஒன்றுடனும் மோதுண்டுள்ளது. Read more

rice millமட்டக்களப்பு காத்தான்குடி அரிசி ஆலை ஒன்றில் வாயு வெப்பமாக்கி வெடித்ததினால் அதனை அண்மித்த பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இந்த சம்பவம் இன்று காலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாக 25 இலட்சம் ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ந்த விபத்தில் உயிர் சேதங்கள் எதும் ஏற்படவில்லையென்று தெரிவிக்கப்படுகின்றது.

UNஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் பரோனெஸ் ஜோய்ஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

bவிடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் மன்னார் மாவட்டத்தின் தோமாஸ் புரி, வங்காலையைச் சேர்ந்த திருமதி அன்னம்மா ஜோன் குலாஸ் அவர்களுக்கு 25,000/- ரூபா நிதியொதுக்கீட்டில் அரவை இயந்திரம் (கிறைண்டர்) ஒன்றையும், மருந்துப் பொருட்களையும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் ஜேர்மன் கிளையினர் வாழ்வாதார உதவியாக வழங்கியுள்ளனர்.

மறைந்த கழகத் தோழர் ரமேஸ் (ஜோசெப் பேடினன்ட்) அவர்களின் தாயாரான அன்னம்மா, ஆயர்வேத வைத்தியம் செய்து வருபவர். இருதய நோயாளியான அவரது கணவர் ஜோன் குலாஸ் ஆயர்வேத மருந்து தயாரிப்பதில் இவருக்கு உதவியாக இருந்து வருகின்றார். முதலீடு இன்மையால் சிறிதளவில் வைத்தியம் செய்துவந்த இவர்கள் தமது வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்கு மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.  Read more

sfdதமது பூர்வீக நிலங்களில் நிலைகொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றக் கோரி, மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம், 3ஆவது நாளாக இன்றும் தொடர்கின்ற போதும், கடற்படையினர், முகாமை விட்டு வெளியில் வந்து மக்களைத் தொடர்ச்சியாகப் புகைப்படமெடுத்து, அச்சுறுத்துவதாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற, மக்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கைக் கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு தற்போது கடற்படை முகாமாக மாறியுள்ள தமது நிலத்தை மீட்டு, தங்களை மீள் குடியேற்றம் செய்ய வலியுறுத்தி, முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த நேற்று முன்தினம் காலை ஆரம்பித்த கவனயீர்ப்புப் போராட்டம், அமைதியான முறையில் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. Read more