Header image alt text

எவ்வித இடையூறு வந்தாலும் எதிர்வரும் 30ம் திகதி பரந்தளவிலான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் இரு மாணவர்கள் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு வவுனியா வளாகத்தின் மாணவர்கள் விடுதியில் வைத்தே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதேவேளை அண்மையில் யாழ் பல்கலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது மாணவர்கள் மூவர் காயமுற்ற நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

வவுனியா விநாயகபுரம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

நேற்று இரவு மேசன் வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த அரபாத் நகர் பகுதியைச் சேர்ந்த சஜா என்ற 28 வயதுடைய இளைஞன் வேகக் கட்டுப்பபாட்டை இழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து பொறியியலாளர் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் கல்லடி பாலத்தில் இருந்து குதித்தாக தெரிவிக்கப்படும் மட்டக்களப்பு மின்சாரசபை காரியாலயத்தில் மின்சார அத்தியட்சகராக கடமையாற்றி வந்த க.உமாரமணன் (33வயது) என்பவருடைய சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் சய்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு நகரத்திற்குள் நுழைவதற்கு நேற்று நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் தடையுத்தரவை மீறி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். Read more

இலங்கை வந்துள்ள ஜப்பானின் வர்த்தக மற்றும் தொழில்துறை குழுவினர் இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர்.

ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் புதிய வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை ஆராய்வதற்காக குறித்த ஜப்பானின் வர்த்தக மற்றும் தொழில்துறை குழுவினர் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மதவாச்சியில் இருந்து தலைமன்னாருக்கு இடையிலான தொடரூந்து சேவை இரண்டு மாதங்களுக்கு தற்காலிமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த தொடரூந்து நிலையங்கள் இடையே உள்ள பாலம் ஒன்றின் புனரமைப்பு பணி இதற்கு காரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை இந்த தொடரூந்து சேவை இடைநிறுத்தப்படவுள்ளது.

கடற்படையின் கவச வாகனம் மோதி பாடசாலை மாணவி ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். யாழ். புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் இன்று காலை 8.00 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதே இடத்தைச் சேர்ந்த திருலங்கன் கேசனா (வயது 9) என்ற மாணவி தனது மாமனாருடன் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தபோதே கடற்படையின் வாகனம் மோதி விபத்துள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மாணவி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். Read more

(எம்.நியூட்டன்)

விடுதலைப் புலிகளின் காலத்திற்குப் பின்னர் தமிழ் மக்களின் பலம் எவ்வாறு குறைந்ததோ அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலமும் குறைந்தால் தமிழ் மக்களின் பலம் மீளவும் குறைந்து விடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாநகர சபைக்கான தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.  அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாநகர சபையின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை போன்று அதனை நிறைவேற்றினால் யாழ். மாநகரம் மிக அழகான பசுமை நிறைந்ததாகவும் இருக்கும். இவ்வாறு அதற்கேற்றவாறு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசியற் தீர்வை பெற்றுக் கொள்கின்ற அதேநேரத்தில் அபிவிருத்தியையும் முன்னெடுக்க வேண்டும். அத்தோடு மக்களுடைய வாழ்வாதாரத்தையும் வாழ்வையும் வளப்படுத்திக் கொள்ளவேண்டும். Read more

வன்னி மக்கள் பாராளுமன்ற உறுப்பினரொருவரூடாக வரும் அபிவிருத்தியை இழந்துள்ளார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

வவுனியா திருநாவற்குளத்தில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபை வேட்பாளர் எஸ்.காண்டீபனின் தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டபோதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்து அங்கு பேசுகையில்,

வட்டாரங்கள் பிரிப்பதில்கூட முரண்பாடுகள் இருந்தன. இதற்குக் காரணம் எமது ஆதரவாளர்கள், முன்பிருந்ததை விட மிக ஆர்வமாக தாம் தேர்தலில் நிற்க வேண்டும் என வந்தார்கள். இதனால் எமது ஆதரவாளர்களுக்காக நாமும் எங்களுக்குள் பிரச்சினைகளை உருவாக்கினோம். கடைசி நேரத்தில் யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் உள்ள அலுவலகத்தில் ஆயிரக்கணக்கானோர் தாமும் தேர்தலில் நிற்க வேண்டுமென நின்றார்கள். அப்போதே எமக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெல்லப் போகின்றது என்பதை அவர்கள் பறைசாற்றுகின்றார்கள் என்பதை உணர்ந்தோம். ஏனெனில் வெல்லக்கூடிய கட்சியில்தான் வேட்பாளர்கள் போட்டிபோட்டு வருவார்கள். Read more