Header image alt text

susmaடெல்லி சென்றிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கடந்த மார்ச் 6ம் திகதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரத்தை சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொரு மீனவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவத்தை கண்டித்து மீனவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, இந்திய மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மீனவர்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மாவை சந்தித்து பேச ஏற்பாடு செய்வதாக அமைச்சர்கள் உறுதிமொழி அளித்தனர். Read more

geeth noyarஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்டமை தொடர்பில் மற்றுமொரு இராணுவ புலனாய்வு உறுப்பினர் கைது ஊடகவியலாளர் கீத் நொயாரைத் தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மற்றுமொரு இராணுவ புலனாய்வு உறுப்பினர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான இராணுவ புலனாய்வு உறுப்பினரை நேற்றிரவு 9.30 அளவில் கைது செய்ததாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. 34 வயதான இராணுவ புலனாய்வு உறுப்பினர், மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. 2008 ஆம் ஆண்டின் மே மாதம் 22 ஆம் திகதி, கீத் நொயார் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. Read more

Srilankan-Airlines-626x380இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், பங்களாதேஷ் தலைநகர் டாக்காவுக்கான அதனது கோடைப் பருவகால சேவைகளை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. A320/321 வகை விமானங்களுக்குப் பதிலாக, A330 விமானத்தைப் பயன்படுத்தியே, இந்த அதிகரிப்பு இடம்பெறள்ளது.

தினசரி ஒரு தடவை இடம்பெறவுள்ள இந்தச் சேவை, ஏப்ரல் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது. அதேவேளை, மாலைதீவுகளின் கான் தீவுகளுக்கு, கொழும்பிலிருந்து நடத்தப்படும் சேவையின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், ஸ்ரீலங்கன் விமான சேவை திட்டமிட்டுள்ளது. Read more

demo01கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று 4ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு மக்கள் மேற்கொண்டுவரும் தொடர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவே கொழும்பில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. Read more

missingதிருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இணைந்து இன்று திங்கள்கிழமை 16வது நாளாக சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தினை கிழக்கு மாகாண ஆளுநர் பணி மனையின் முன்னே மேற்கொண்டுள்ளனர்.

நேற்று மாலை இவர்கள் திடீரென  எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்துனுடன் பேசும் வகையிலேயே மாலை 5 மணிக்குப் பின்னர் தபால் நிலைய வீதியில் உள்ள அவரின் வீட்டின் முன்னே திரண்டிருந்து ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டார். Read more

ranilநாட்டுக்கு எதிரான ஜெனிவா யோசனை குறித்த விசாரணைகளுக்கு எந்தவொரு மேலைத்தேய தரப்பினரும் தேவையில்லை என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வீரகெடிய பகுதியில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும், மனித உரிமைகள் ஆணையாளரின் சில கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியது எனவும் சில கருத்துக்களில் உடன்பாடு இல்லை எனவும், பிரதமர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Dayan_Jayatillekaநாட்டில் ஆயுத குழுவை தோற்கடித்து ஜனநாயகத்தை நிலைநிறுத்திக் கொடுத்த பின்னர் சர்வதேச அல்லது தேசிய நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிமன்றங்களை அமைத்து இராணுவத்தை தண்டிக்க முயற்சிப்பது தார்மீக தன்மைக்கு முரணானது. உள்நாட்டு போர்களை வெற்றிகொண்ட நாடுகள் எல்லாம் விசேட நீதிமன்றத்தை நிராகரித்து வரும் நிலையில் நாமாக கழுத்தை நீட்டுகின்றோம் என கலாநிதி தயான் ஜெயதிகல தெரிவித்தார். Read more

sri cinaஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சரும் அரச ஆலோசகருமான ஜெனரல் சேன்ங் வான்குவாங் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இலங்கைக்கும் சீனாவுக்குமிடையே இருந்துவரும் நீண்டகால உறவுகளை இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இலங்கையின் இறைமைக்கும் தேசிய பாதுகாப்புக்கும் சீனாவிடமிருந்து கிடைக்கும் உதவிகளைப் பாராட்டினார். Read more

fusballவவுனியா, யங்ஸ்ரார் உதைப்பந்தாட்ட கழகத்தின் அணித்தலைவர் மீது வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் வைத்து இளைஞர் குழுவொன்று தாக்குதல் நடத்தியமையால் அவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று  இரவு 9.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, Read more

missingதிருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனின் இல்லத்தின் முன் திரண்டு இன்று மாலை முதல் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 15 தினங்களாகவே, கிழக்கு மாகாண ஆளுநர் பணிமனையின் முன்னே சுழற்சி முறையிலான உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் நிலையில், இன்று மாலை அங்கிருந்து அகன்று திருகோணமலை தபால் நிலைய வீதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைரின் இல்லத்தின் முன்னே திரண்டனர். Read more