Header image alt text

vavuniyaஐ.நா மனித உரிமை சபை இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது எனக் கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் உண்விணாரதப் போராட்டத்திற்கு முன்பாகவே இவ் ஆர்ப்பாட்டம் இன்றுமதியம் இடம்பெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஐ.நாவே இலங்கை அரசிற்கு கால நீடிப்பை வழங்காதே, சர்வதேசமே எங்களுக்கு தீர்வைத் தா, வழங்காதே வழங்காதே காலநீடிப்பை வழங்காதே, சர்வதேசமே நீதியை புதைக்காதே என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர். Read more

jjjjjஇறுதி யுத்தத்தின்போது சரணடைந்து மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலத்தின் முன்னால் 8ஆவது நாளாகவும், இன்று தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு கோரியும் அரசாங்கத்தக்கு கால அவகாசம் வழங்குவது தமக்கான தீர்வினை கிடைக்கச் செய்வதில் பெரும் சிக்கல் நிலை ஏற்படுத்தும் எனவும் வலியுறுத்துகின்றனர். Read more

nhjhjhகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலுடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று பகல் 12.45 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி தச்சன்தோப்புப் பகுதியில் பாதுகாப்பற்ற கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

maithriரஸ்ய அரச தலைவர் விளாடிமிர் புட்டினின் அழைப்பினை மூன்று நாள் விஜயத்தை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துள்ளார்.

இன்று அதிகாலை 5.45 மணிக்கு ஈ.கே 641 என்ற விமானத்தின் மூலம் ரஸ்யா நோக்கி அரச தலைவர் புறப்பட்டுச் சென்றதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அரச தலைவர் ஒருவர் நான்கு தசாப்தங்களின் பின்னரே ரஸ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்கின்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

vimal (12)தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்ச, சிறைச்சாலைக்கு உள்ளே, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குறறச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பிணை வழங்க கோரிய மனுவை மேல் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. இந்நிலையில் 73 நாட்களாக தனக்கு பிணை வழங்காமைக்காக விமல் வீரவங்ச உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக தேசிய சுதந்திர முண்ணனி தெரிவிக்கின்றது.

20170320_122739வீதியிலும் ஒருநாள் செயற்திட்டத்தின் கீழ் பா.உ எஸ்.வியாழேந்திரன்(அமல்) அவர்கள் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட புதுமண்டபத்தடி கிராம சேவகர் பிரிவில் உள்ள எண்ணம்பாலப்பூவல் கிராம மக்களை நேற்று (20.03.2017) நேரில் சென்று சந்தித்துள்ளார்.

எண்ணம்பாலப்பூவல் இளைஞர்களின் வேண்டுகோளிற்கமைய எண்ணம்பாலப்பூவல் கிராமத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் வீடு வீடாகச் சென்று மக்களது நிறைகுறைகளை கேட்டறிந்ததோடு, கிராமத்தில் உள்ள குளங்கள், பாதிப்படைந்து காணப்படும் வீதிகள், யுத்ததினால் பாதிப்படைந்த நிலையில் உள்ள கட்டிடங்கள், புனரமைக்கப்படாது காணப்படும் விளையாட்டு மைதானம் போன்றவற்றை பார்வையிட்டதுடன் கிராமத்தின் விவசாய அமைப்பு, விளையாட்டுக்கழகம், ஆலய நிருவாகத்தினர், இளைஞர் அமைப்புக்கள், கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், கிராம மக்கள் ஆகியோருடன் கிராம அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
Read more

arrest (9)அண்மைக் காலங்களில் வாள் போன்ற கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தி, யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் குழுவொன்றின் பிரதான உறுப்பினர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் வசமிருந்து கைக்குண்டு ஒன்று, கத்திய உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

vajira abeywardenaகிராம சேவகர் வெற்றிடங்களுக்குப் புதியவர்கள் நியமிக்கப்படும் வரை, ஓய்வுபெற்ற கிராம சேவகர்கள் 2,000 பேரை சேவையில் மீள இணைத்துக் கொள்ளவுள்ளதாக, உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்த்தன வவுனியாவில் தெரிவித்துள்ளார்.

கிராம சேவகர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தற்போதுள்ள வெற்றிடங்கள் நிரப்பப்படும் வரையே, ஓய்வுபெற்றவர்கள் மீள கடமைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார

graduade28 நாட்களாக தமக்கான வேலைவாய்ப்பினை வழங்கக் கோரி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சத்தியாக்கிரகப் போராட்த்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

உரிய பதில் கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என 22 நாட்களாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக 22ஆவது நாளாகவும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

raviபிரித்தானிய த பேங்கர் சஞ்சிகையின் தரவரிசையின் படி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆசிய பசுபிக் வளையத்தின் சிறந்த நிதி அமைச்சர் விருதினை பெற்றுக்கொள்ள பிரித்தானியா செல்லவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுபற்றி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், பிரித்தானியாவின் த பேங்கர் சஞ்சிகையில் ஆசிய பசுபிக் வளையத்தின் 2017ஆம் ஆண்டிற்கான சிறந்த நிதி அமைச்சராக பெயரிடப்பட்டுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கான விருது வருகின்ற 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிரித்தானியாவில் வைத்து அவருக்கு வழங்கப்படவுள்ளது. Read more