Header image alt text

d-sithadthan-m-pதமிழ் மக்கள் பேரவை எதிர்வரும் 24ஆம் திகதி நடத்தவுள்ள பேரணி பாரிய மக்கள் எழுச்சியாக அமைய வேண்டுமெனத் தெரிவித்துள்ள கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், இதில் அனைத்து தமிழ் மக்களுகம் பங்கெடுக்க வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்,

தமிழ் மக்கள் தற்போது இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர். இத்தருணத்தில் மிகக் கவனமாக, பக்குவமாக காரியங்களை செய்யாவிட்டால் அனைத்தும் தவறாகிவிடும். மீண்டும் அழிவுப் பாதைக்கு மக்களை கொண்டு போகக்கூடாது. அதனைச் செய்யவும் மாட்டோம். அதில் நாம் தெளிவாகவிருக்கின்றோம். தமிழ் மக்கள் விடயத்தில் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். சில விடயங்களில் விட்டுக்கொடுப்புகள் இடம்பெற்றுள்ளன. சில விடயங்கள் எமக்குத் தெரியாமலே நடைபெறுகின்றன. நாமும் பொறுமையுடன் இருக்கின்றோம். அதனால் எம்மை மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று கருதக்கூடாது. Read more

siddharthanசில்லாலை வட மத்தி கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொதுக்கூட்டமும் மாணவர்களுக்கான கௌரவிப்பும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்வில் கலந்துகொண்ட புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளு மன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆற்றிய உரை,

எமது மக்கள் சுமார் 80 சத­வீ­த­ம­ள­விற்­கு மேல் நம்­பிக்­கை­யு­டனும் எதிர்­பார்ப்­பு­டனும் ஒரு மாற்­றத்­திற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு வாக்­க­ளித்­துள்­ளார்கள். ஆனால், மாற்றம் ஏற்­படவில்லை. அத்­த­கைய சூழலில் மிக மெது­வா­கவே ஓரு சில நட­வ­டிக்­கைகள் நகர்ந்­து­கொண்டு செல்­கின்­றது.
Read more

566அம்பாறை ஆலையடிவேம்பு திருக்கோவில் பிரதேச செயலாக்கப் பிரிவுக்குட்பட்ட 2000 ஆயிரம் ஏக்கருக்கு மேற்றப்பட்ட வயல் காணிகளை, வனவள அதிகாரிகள் நில அளவை செய்து சுவீகரிக்கும் செயற்பாட்டைக் கண்டித்து இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் முன்னால் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள 6 கண்டங்களான தோணிக்கல், டிப்பமடு, பெரியதுலாவை, தோணிக்கல் மேல் கண்டம், தென்கண்டம், வடகண்டம் ஆகிய பிரதேசங்களின் 2000 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட வயல் காணிகளை சவீகரிக்கும் நடவடிக்கையைக் கண்டித்தே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. Read more

பத்திரிக்கை அறிக்கை

Posted by plotenewseditor on 15 September 2016
Posted in செய்திகள் 

bavanவடக்கில் உள்ள பௌத்த விகாரைகள் அழிக்கப்படுகின்றன. அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற மோதல்கள் வலுப்பெற்று வருகின்ற நிலை தென்னிலங்கையில் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது.

பௌத்த மதம் சிங்கள மொழிபேசும் இனத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல என்கின்ற போதிலும் இலங்கையில் உள்ள சிங்களவர்களால் பௌத்த விகாரைகளும், புத்த சிலைகளும் நில ஆக்கிரமிப்பின் சின்னமாகவும், தமிழின அழிப்புக்கு அதாரமாகவும் பயன்பட்டு வந்தமையே கடந்தகால கசப்பான வரலாறாகும். Read more

h-a-a-sarathkumaraவட மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள எச்.ஏ.ஏ சரத்குமார கடமையை பொறுப்பேற்றுள்ளார். இன்றைய தினம் காங்கேசந்துறையில் அமைந்துள்ள அலுவலகத்தில் கடமையேற்றுக்கொண்டார்.

இவரை வரவேற்பதற்காக வட பகுதியில் இருந்து பொலிஸ் உயரதிகாரிகள் பலர் வருகை தந்திருந்தனர். பொலிஸ் மரியாதை அணிவகுப்பை அடுத்து மங்கள விளக்கேற்றப்பட்ட பின்னர் சுப நேரத்தில் கையெழுத்திட்டு தனது கடமையை பொறுப்பேற்றார். இவர் யுத்தம் நிறைவடைந்த பின்னர் 5ஆவது வட மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

weerகிளிநொச்சி பளை தர்மங்கேணி பகுதியில் 278ஆவது மைல்கல் பிரதேசத்தில் இன்று அதிகாலை 5.30மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மூன்று பெண்களும், இரண்டு ஆண்களுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்து மத்துகம நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று எதிர்திசையில் பயணித்த வேன் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. Read more

arrest (9)ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஏ.அருள் ஜயரட்ணம் (41) என்ற பெயருடைய விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இந்திய கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

நேற்று கைதுசெய்யப்பட்ட இவர் இராமேஸ்வரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சட்டத்திற்கு மாறான முறையில் இந்தியாவிற்குள் பிரவேசித்த குற்றத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அமெரிக்க டொலர்கள் மற்றும் சிறுவர்களின் ஆடைகள் என்பனவும் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளன. Read more

highwayதெற்கு அதிவேக வீதியின் களனிகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 27பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு அதிவேக வீதியின் களனிகம தொடங்கொட ஆகிய பிரதேசங்களுக்கு இடையிலான 26 ஆவது மைல்கல் அருகே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பாதையின் திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த ட்ரக் வாகனம் ஒன்றுடன் கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more

motor shellவெடிக்காத நிலையில் இருந்த ஷெல்லினை வெட்டியவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.மணியம் தோட்டம், உதயபுரம், 3ஆம் குறுக்கு வீதி பகுதியைச் சேர்ந்த தாகிதப்பிள்ளை அன்ரன் பொஸ்கோ (வயது 37) என்பவரே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த நபர், வெடிக்காத பழைய ஷெல்களை எடுத்து அவற்றில் இருக்கும் மருந்தினை மீன்பிடிப்பவர்களுக்கு விற்பனை செய்கிறவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

bangladeshபங்களாதேஷ் பிரஜைகளுக்கான ஒன் எரைவல் வீசா முறையை இலங்கை அரசாங்கம், அந்த நாட்டுக்கு அறிவிக்காமலேயே நிறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பங்களாதேஷ_ம் இலங்கைப் பிரஜைகளுக்கு வழங்கி வந்த ஒன் எரைவல் வீசா முறையை நிறுத்தியுள்ளதாக, வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இலங்கை உயர்ஸ்தானிகர் யசோஜா குணசேகரவை அழைத்து இது குறித்து அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு விளக்கம் கோரியுள்ளது. சுமார் ஒரு மணித்தியாலம் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டுள்ள பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் கம்ரூல் அஷன், என்ன காரணத்திற்காக ஒன் அரைவல் வீசா நிறுத்தப்பட்டது என்பதனை அறிந்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். Read more